மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில்மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-09 08:19 GMT

மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ளது பத்ரகாளியம்மன் திருக்கோவில் இக்கோவிலில் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற பாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் எடுப்பார்கள். மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விடுவார்கள் கடந்த காலங்களில் வள்ளியம்மாள் என்ற பாட்டி அப்பம் சுற்றினர்.

தற்போது முத்தம்மாள் கடந்த 51 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறாள் இதற்காக கடந்த 40 நாட்கள் விரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது ஏழு ஊருக்கு பாத்தியப்பட்ட கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏழு கூடையில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவார். முன்பதாக பாசிப்பயிறு தட்டாம்பயறு கருப்பட்டி ஆகியவைகளை உரலில் வைத்து இடித்து ஆப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும் இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேத்திக்கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பார்.

இங்கு வந்து மகா சிவராத்திரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதமிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அப்பத்தை வாங்கிக் கொண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும் எந்த வித நோயும் வராது என்றும் குழந்தை இல்லாத தம்பதியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூதாட்டியிடம் ஆசிபெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இன்று வரைக்கும் நடைமுறையிலுள்ள நம்பிக்கையாகும். கடந்த 50 வருடங்களாக அப்பம் சுட்ட மூதாட்டி இன்று 51ஆவது வருடத்தில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடவிருக்கும் நிகழ்ச்சியை காண்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

Tags:    

Similar News