இரணியல் அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு
இரணியல் அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழந்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-07-02 15:14 GMT
கோப்பு படம்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக கிடப்பதாக நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த முதியவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது ரயிலிலே அடிபட்டு இறந்து போயிருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் இதுவரையிலும் தெரியவில்லை. இறந்து கிடந்த முதியவர் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்படி 194 பி என் எஸ் எஸ் பிரிவில் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.