கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து  முதியவர் பலி

ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து  முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-26 13:09 GMT

முதியவர் பலி

ஆவடி, கவுரிப்பேட்டை, கள்ளுக்கடைச் சேர்ந்தவர் மாரியப்பன், 67 ; ஆட்டோ டிரைவர். இவரது வீட்டின் முன் மூடி பாதி உடைந்த நிலையில், 12 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டி உள்ளது. நேற்று மதியம், மாரியப்பன் மது போதையில் கழிவுநீர் தொட்டி மீது நின்று இருந்தார். எதிர்பாராத விதமாக மூடி உடைந்து தொட்டிக்குள் விழுந்துள்ளார். இறந்த நிலையில் அவரை ஆவடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News