ஓடும் பேருந்தில் ஏற முயன்ற முதியவர் பலி

திருவண்ணாமலையில் ஓடும் பேருந்தில் ஏற முயன்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2024-04-25 13:42 GMT

முதியவர் பலி

திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல தெலுங்கானாவை சேர்ந்த கோமட்டி ராம்ரெட்டி (வயது 70) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் முடிந்துவிட்டு ஊருக்கு செல்ல அவலூர்பேட்டை பைபாஸ் சாலையில் ஓடும் பேருந்தில் ஏற முயன்றபோது தவறி விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News