இரணியல் அருகே தீயில் கருகி மூதாட்டி பலி

இரணியல் அருகே வீட்டின் சமயலறையில் உடல் கருகிய நிலையில் இறந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-01-17 03:55 GMT
பைல் படம்
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள இரணியல்கோணம்  என்ற பகுதியை  சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (58). தக்கலையில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தாய் சரஸ்வதி (86) மற்றும் 19 வயது மகன் 16 வயது மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.      நீலகண்ட பிள்ளை கடந்த 13ஆம் தேதி பொங்கல் வியாபாரம் தொடர்பாக மகனுடன் தக்கலையில் உள்ள கடையில் தங்கி வியாபாரம் செய்து வந்தார். வீட்டில் மூதாட்டி சரஸ்வதியும் பேத்தியும் மட்டும் இருந்தனர்.   சம்பவத்தன்று இரவு பாட்டிக்கு சாப்பாடு, தண்ணீர் கொடுத்து விட்டு சிறுமி தூங்க சென்று விட்டார். மறுநாள் காலை சுமார் 5:30 மணி அளவில் பார்த்தபோது பாட்டி சரஸ்வதி உடல் கருகிய நிலையில் சமையலறையில் இறந்துகிடந்தார்.       இது குறித்து அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நீலகண்ட பிள்ளை இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய  விசாரணையில்  மூதாட்டி சரஸ்வதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என  தெரிய வந்தது. சரஸ்வதியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.       இது ஒரு குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News