டூவீலரில் சென்றவர் வாகனம் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து

டூவீலரில் சென்றவர் வாகனம் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-03 11:45 GMT
டூவீலரில் சென்றவர் வாகனம் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 63. இவர் பிப்ரவரி 1-ம் தேதி காலை 9:30 மணி அளவில் கரூர்- கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் சின்னாண்டாங் கோவில், அருகே உள்ள பாலாஜி பிளைவுட் ஷாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத டூவீலர், மின்னல் வேகத்தில் சென்று ராஜேந்திரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் வாகனத்துடன் நிலைகுழைந்து கீழே விழுந்த முதியவர் ராஜேந்திரனுக்கு, இடுப்பு மற்றும் வலது கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலர் மீது மின்னல் வேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதை ஓட்டிச் சென்ற நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Tags:    

Similar News