திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி 4-நாள் ஊஞ்சல் திருவிழா

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி 4-நாள் ஊஞ்சல் திருவிழாவில் பக்தர்கள் அரோகரா கோசமிட்டு மகிழ்ந்தனர்.

Update: 2024-06-16 12:34 GMT

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி 4-நாள் ஊஞ்சல் திருவிழாவில் பக்தர்கள் அரோகரா கோசமிட்டு மகிழ்ந்தனர்.


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சனிக்கிழமை இன்று நாளாந்திருநாள் ஆனி ஊஞ்சல் திருநாளில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானையும் எழுந்தருளி ஆஸ்தான மண்டபம் வலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி தீவாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியின் நிகழ்வு அரங்கேறியது. இதை கண்ட பக்தர்கள் அரோகரா கோசமிட்டு மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News