ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வீர ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-03 02:02 GMT

கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அல்லி நகரில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆலயம் சீரமைக்கப்பட்டு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News