கைலாசநாதர் ஆலயத்தில் அக்.28-ல் அன்னாபிஷேகம்

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அக்.28-ல் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

Update: 2023-10-26 06:22 GMT

கைலாசநாதர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியைத் தொடர்ந்து அக்.28-ல் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் பரம்பரை அறக்கட்டளைதாரர்களால் நடத்தப்படும். இதனையடுத்து இந்த ஆண்டு கைலாசநாதர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு மாலை 6 மணி அளவில் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவரான ஸ்ரீகைலாசநாதர் சுவாமி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார்கள், அன்னாபிஷேக நிரந்தரக் கட்டளைதாரர் பெப்சி பி.சுரேஷ்குமார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News