ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம், வெங்கடேசபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்ற பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி காண்பவர்களை கவர்ந்தது.

Update: 2024-02-18 10:44 GMT
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த வெங்கடேசபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிள்ளைகளின் கண்கவர் வகையில் ஆடல், பாடல், பேச்சுப்போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு அரசு பள்ளியின் சிறப்புகளையும் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எழிலரசன், ஆணந்தகண்ணன் நந்தினி கரிகாலன் சீனிவாசன், நாகராஜன், சகுந்தலாமணி கண்ணன் பழனிச்சாமி வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News