குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் !

தென்காசியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-06-12 08:45 GMT

 உறுதிமொழி 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி உலக அளவில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று (12.06.2024) தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும். குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன்.
Tags:    

Similar News