தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு விண்ணப்பம் வழங்கல்

தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த முதுகலை படிப்பில் சேர விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

Update: 2024-05-10 17:39 GMT

தமிழ் பல்கலைக்கழகம் 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பப்படிவம் வழங்கும் நிகழ்வு பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், துவங்கி வைக்கப்பட்டது.  அப்போது, துணைப்பதிவாளர்  கோ.பன்னீர்செல்வம், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன், கண்காணிப்பாளர் தே.ரேவதி மற்றும் சேர்க்கைப் பிரிவுப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.  முதல் விண்ணப்பத்தை செல்வி இ.நிர்மலா என்பவர் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை வரலாறு பட்டப் படிப்பிற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டார். மேலும், வளாகக்கல்வி வாயிலாக ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டப் படிப்பு, முதுகலை அறிவியல், MSW, MFA, MPA,  முதுநிலைப் பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க   www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News