தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுத விண்ணப்பம்

திண்டுக்கல் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வா்கள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-27 08:43 GMT

திண்டுக்கல் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வா்கள் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுத விரும்பும் தனித் தோவா்கள், மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயிற்சித் தோவா்கள், தனித் தேர்வா்களுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தோவு, ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வா்கள், ஏற்கெனவே தேர்வு எழுதிய அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். அவரவா் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியா், பயிற்சி நிறுவனத்தின் மூலம் இணைய வழியில் ஏப்.1 முதல் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோந்த தேர்வா்கள் ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தாா்.
Tags:    

Similar News