எஸ்டிபிஐ கட்சியின் மண்டல செயலாளர் நியமனம் !!
நெல்லை மண்டல செயலாளராக எஸ்எஸ்ஏ.கனி என்பவர் இன்று (மே 25) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Update: 2024-05-25 06:19 GMT
எஸ்டிபிஐ கட்சியின் கன்னியாகுமரி, நெல்லை மாநகர், புறநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல செயலாளராக எஸ்எஸ்ஏ.கனி என்பவர் இன்று(மே 25) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நெல்லை மண்டல செயலாளர் நியமனத்தை தொடர்ந்து அவருக்கு சக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.