மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா !

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய 558 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2024-04-03 06:50 GMT

பணி நியமன ஆணை

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இக்கல்லூரியின் சார்பாக 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம்களை நேரடியாகவும், இணையத்தின் வாயிலாகவும் நடத்தி 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்ற 558 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இ.எஸ். கல்விக்குழுமங்களின் நிர்வாகத்தலைவர் மற்றும் செயலாளர் எஸ்.செந்தில்குமார், பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News