கோலப் போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டி பரிசு வழங்குதல்

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதை வலியுறுத்தில் நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்.

Update: 2024-04-04 10:00 GMT

கோலப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்குதல்

கடலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் மாநகராட்சி சார்பில் 1 ஆம் தேதி அன்று நடைபெற்ற கோலப்போட்டியில் பங்கேற்றவர்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் பாராட்டி பரிசுகளை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மு. காந்திராஜ் உள்ளார்.
Tags:    

Similar News