வெள்ள காலத்தில் சிறப்பாக பணியாற்றிய வட்டாட்சியர் பாராட்டு

மழை வெள்ள காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த செய்தியாளருக்கு ஏரல் வட்டாட்சியர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார்.

Update: 2024-02-11 11:49 GMT

பாராட்டு 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, குருகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வியாபாரிகளின் பல்வேறு பொருட்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சிதம்பர மணிகண்டன் என்பவர் பொதுமக்களின் அவல நிலையை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு செய்திகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சேர்த்தார்.

அதன் பெயரில் கிராம மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ஆகியவைகள் உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இதனை பாராட்டும் வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏரல் வட்டாட்சியர் கோபால் செய்தியாளருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார்.

Tags:    

Similar News