ஆரல்வாய்மொழியில் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் 

ஆரல்வாய்மொழியில் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர்.

Update: 2024-06-22 10:42 GMT

தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டார்குளம் பகுதி சேர்ந்தவர் சுயம்பு.  இவர் தாமரை பூ வியாபாரம்  செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூன்று மகள்களுக்கு திருமணமான நிலையில் கடைசி மகள் கிருஷா (19) நாகர்கோவில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.      

 ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் அருள்மகன் (26) இவர் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் அலுமினியம் பேப்ரிகேஷன் தொழில் செய்து வருகிறார். இவரது பெரியம்மா வீட்டிற்கு வீட்டுக்கு அருள் மகன் அடிக்கடி சென்று வருவார். அப்போது கிருஷாவை பார்த்து பழகி உள்ளனர்.  

    பின்னர் காதலாக மாறியுள்ளது. நேற்று காலை கல்லூரியில் செல்வதாக புறப்பட்ட கிருஷா அருள்மகனுடன் முப்பந்தல் கோவிலில் வைத்து நேற்று காலை திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் ஆரல்வாய்மொழி போலீசில்  தஞ்சமடைந்தனர்.   

  சம்பவம் தெரிய வந்ததும் கிருஷா வின் உறவினர்கள் அவரை எப்படியாவது தங்களுடன் அழைத்து செல்ல பாச போராட்டம் நடத்தினர். ஆனால் கிருஷா உறவினர்களுடன்  செல்ல மறுத்ததால் போலீசார் காதலர்களை சேர்த்து வைத்தனர்.

Tags:    

Similar News