ஆரணி : கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!

ஆரணியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-10 08:21 GMT

கஞ்சா 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளிக்கூடத்தெரு கன்னிகோவில் அருகாமையில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆரணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நோட்டமிட்டனர். அப்போது பாபு, ராஜகுமார் ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனை செய்வதற்காக வந்தனர். போலீசாரை கண்டதும் ராஜ்குமார் தப்பி ஓடிவிட்டார்.இதனையடுத்து போலீசார் பாபுவை கைது செய்து, அவரிடம் இருந்து 1,100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News