நடிகை நமீதாவை விவிஐபி கேட் வழியாக அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம்!

மேட்டுப்பாளையத்தில் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, நடிகை நமீதாவை விவிஐபி கேட் வழியாக அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2024-04-11 03:42 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டம்  நடைபெற்றது.இந்த பொது கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு தினங்களாக கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நமீதா முகாமிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த அவரை விவிஐபி கேட்டு வழியாக செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் செல்லும் வழிக்கு நமீதா சென்றார்.அங்கிருந்த போலீசார் அவரை விவிஐபி கேட் வழியாக செல்லுமாறு தெரிவித்தனர்.இதனைதொடர்ந்து நமீதா மீண்டும் விவிஐபி கேட் பகுதிக்கு வந்தார்.

அவரை காவல் துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.அப்போது அங்கும் இங்கும் அலைகழிக்கப்பட்ட நமீதா வி.வி.ஐ.பி கேட் முன்பாக நின்று அங்கு இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து காவல்துறையினர் வி.வி.ஐ.பி கேட் வழியாக நமீதாவை பொதுகூட்ட அரங்கிற்கு செல்ல அனுமதித்தனர்.நமீதா அங்கும் இங்கும் அலைகழிக்கப்பட்ட நிலையில் அங்கே இருந்து பாஜக தொண்டர்கள் நமீதாவை உற்சாகத்துடன் புகைப்படம்,வீடியோ எடுத்து கொண்டனர்.

Tags:    

Similar News