ராசிபுரம் பஸ் நிலையத்தில் தகராறு: தடுக்க வந்த நண்பருக்கும் தர்ம அடி

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் இளைஞர்கள் தகராறை தடுக்க வந்த நண்பருக்கும் தர்ம அடி விழுந்தது.

Update: 2024-05-19 16:06 GMT

தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் இளைஞர்கள் தகராறு தடுக்க வந்த நண்பருக்கும் தர்ம அடி.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் ஒரு வழிச்சாலை தனியார் வங்கி அருகே இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராசிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிபோதையில் இளைஞர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாகவே உள்ளது. காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு ரோந்து பணியில் இருந்தும் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் ஈடுபடுகின்ற நபர்களை கண்டித்தும் வழக்கு பதிவு செய்தும் எச்சரித்து வருகின்ற நிலையில்,

தற்போது இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பழைய பஸ் நிலையம் பகுதியில் இளைஞர்கள் இருவர் குடிபோதையா என்று தெரியவில்லை,

இந்நிலையில் ஒருவருக்கொருவர் கற்களை கொண்டும் கைகளாலும் தாக்கிக் கொண்டு சாலையில் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவத்தை அறிந்து அவர்களது உறவினர்கள் நண்பர்கள் தடுக்க வந்த போது அவர்களுக்கும் தர்ம அடி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இதுபோன்று தகராறில் அடிதடியில் ஈடுபடும் இளைஞர்கள் , நபர்களை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News