ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்; காணொலி காட்சி மூலம் இன்று விசாரணை!!

ஆம்ஸ்வ்ராங் உடல் கட்சி அலுவலத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Update: 2024-07-07 02:10 GMT

armstrong murder case

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஏற்றப்பட்ட வாகனம் அவரது இல்லத்திற்கு சென்றது. இந்நிலையில், ஆம்ஸ்வ்ராங் உடல் கட்சி அலுவலத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது. அனுமதி கோரி மாநகராட்சியிடம் அளித்த கோரிக்கை மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அதனால், ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கை மாநகராட்சிகளுக்கான நீதிபதியே விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News