பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்காக கொள்ளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது

சாத்தூர் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும் போது பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-13 16:18 GMT

கைதான ராணுவ வீரர் 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தை வேலு (28). இவர் டெல்லியில் இந்திய ராணுவத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 

 இந்த நிலையில் கடந்த ஜுன் 1 ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து உள்ளார். மேலும் சொந்த ஊருக்கு வந்த குழந்தை வேலுக்கு ஆடம்பரமான உல்லாச வாழ்க்கைக்கு பணம் தேவை பட்டுள்ளதை அடுத்து சாத்தூர் ஆலங்குளம் அருகில் உள்ள டி.கரிசல்குளத்தில் கடந்த ஜூன் 7ம் தேதி சத்தியராஜ் என்பவரின் வீட்டில் இராணுவ வீரர் குழந்தை வேலு வீட்டின் பூட்டை உடைத்து 4 கிராம் தங்கம்,

மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் சத்யராஜ் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது ராணுவ வீரர் குழந்தைவேல் என்பதை காவல்துறையினர் உறுதிப் படுத்தியதை அடுத்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கொள்ளை அடித்த பணத்தில் பெண்களுடன் உல்லாச மாக இருக்கும் போது காவல்துறை யினர் அவரை கைது செய்தனர் மேலும் சத்யராஜ் வீட்டில் கொள்ளை அடித்த நகையை சங்கரன்கோவில் பகுதியில் விற்பனை செய்ததும் குழந்தைவேலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததை,

அடுத்து ராணுவ வீரர் குழந்தைவேலுவை சங்கரன் கோவிலுக்கு அழைத்து சென்று விற்பனை செய்த நகையை மீட்டனர் மேலும் ஆலங்குளம் போலீசார் ராணுவ வீரர் குழந்தைவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விசாரணையில் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் வேறு எங்கேயும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  விசாரணையில் மேலும் ராணுவ வீரர் குழந்தைவேல் பல்வேறு திருட்டு சம்பவங்கள் ஈடுபட்டது குறித்து வெளிவர வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விடுமுறை நாட்களில் ராணுவ வீரர் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்கு ,

வீடுகளில் நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராணுவ வீரர் குழந்தை வேலுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News