சாராயம் கடத்திய இருவர் கைது - காவல் துறையினர் விசாரணை

அரூர் அருகே கோட்டப்பட்டியில் சாராயம் கடத்திய இருவர் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-04-18 05:33 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டப்பட்டி காவல் நிலைய பகுதிகளில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம் அந்த வகையில் நேற்று ஆண்டிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ராஜா மற்றும் முருகன் ஆகியோர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் 25 லிட்டர் சாராயம் கிடைத்தது அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் சாராயத்தை விற்பனைக்காக கடத்திச் செல்வது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ராஜா முருகன் ஆகிய இருவரையும் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News