போலீசார் மீது மிளகாய் பொடி தூவி கைது - தப்பி ஓட்டம்

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கைதி போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பி ஓட்டம் - போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2024-03-05 15:45 GMT

மகாராஜா

தூத்துக்குடி கொலை முயற்சி வழக்கில் விசாரணைக்காக விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பேரூரணி சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஐகோர்ட் மகாராஜா என்பவர் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் மீது மிளகாய் பொடி தூவி விட்டு தப்பி ஓடிய சம்பவத்தால் பரபரப்பு தப்பி ஓடிய கைதி ஐகோர்ட் மகாராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  தூத்துக்குடியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதைத்தொடர்ந்து விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக பேரூரணி சிறையில் இருந்து ஆயுதப்படை சேர்ந்த பெண் காவலர் உள்ளிட்ட இருவர் பாதுகாப்புடன் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக இன்று காலை பேருந்தில் அழைத்து சென்றுள்ளனர். விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பின்னர் இன்று மாலை பேருந்து மூலம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு ஐகோர்ட் மகாராஜாவை காவல்துறையினர் பாதுகாப்புடன் கூட்டி வந்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு மினி பேருந்து மூலம் பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்திருந்து நடந்து செல்லும் போது கைதி ஐகோர்ட் மகாராஜா தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் கண்ணில் தூவி விட்டு தப்பி ஓடி உள்ளார். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய கைதி ஐகோர்ட் மகாராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News