நபிகள் நாயகம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபர் கைது

நபிகள் நாயகத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபர் மீது இஸ்லாம் அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2024-02-25 02:36 GMT

நபிகள் நாயகம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபர் கைது

புகுந்து விளையாடு என்ற முகநூல் பக்கத்தில் நபிகள் நாயகத்தினை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபர் மீது இஸ்லாம் அமைப்புகள் தங்களின் இறை தூதரான நபிகள் மற்றும் அவரது துணைவி யாரை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சர்ச்சைக்குரிய பதிவினை பகிர்ந்த நீலகண்டன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபரை கைது செய்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News