கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிப்பு
அணுமின் நிலைய வேலை வாய்ப்பில் உயர் முன்னுரிமை வழங்க போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு படி ஜாமீனில் விடுவித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-22 05:48 GMT
கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கூடங்குளம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு உயர் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கூடங்குளம் போலீசார் கைது செய்திருந்த நிலையில் நேற்று இரவு அனைவரையும் வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு படி ஜாமீனில் விடுவித்தனர்.