மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் கலை விழா

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் கலைவிழா நடைபெற்றது.

Update: 2024-03-28 11:57 GMT

கலை விழா

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் கலை விழா நடைபெற்றது.  மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்  மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர்  ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ் மற்றும் ஆராய்ச்சி புலத்தலைவர்  கோ.அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சிறப்பு விருந்தினராக ‘பார்க்கிங்' மற்றும் டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மேதகு திரைப்பட கதாநாயகன் விஜய் ஆகியோர்  கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர்.  அதன் பிறகு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  முன்னதாக, நுண்ணுயிரியல் துறைத்தலைவர் லி.பிரின்ஸ் வரவேற்றார். நிறைவாக வணிகவியல் துறைத் தலைவர் ஜி.செந்தில்குமார் நன்றி கூறினார்.  இவ்விழாவில்,  தமிழ்த்துறைத்தலைவர் வீ.வெற்றிவேல் அறிமுக உரையாற்றினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கி.உஷா தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News