வந்தார்கள், உருட்டு கட்டையால் விளாசினார்கள் , சென்றார்கள்

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடியில் சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்திய நான்கு பேர் கொண்ட கும்பல் ஆட்டோ ஓட்டுநரை அடித்து உதைத்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-03-20 03:24 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் பாஸ்கர் (38) இவர் சம்பவ தினத்தன்று இரவு 8.30 மணிக்கு தமது ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தார் அப்பொழுது இரண்டு பைக்கில் வேகமாக வந்தவர்கள் ஆட்டோவை கை காட்டி நிறுத்தினர்.  ஆட்டோவை நிறுத்திய மறு  நிமிடமே அவர்கள் கொண்டு வந்திருந்த கம்பு கட்டையை எடுத்து பாஸ்கரை நான்கு பேரும் குமறு குமுறு என்று  குமுறி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த பாஸ்கர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பாஸ்கர் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் அடையாளம் தெரியாத நான்கு நபர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  சாலை முழுவதும் உள்ள சி டிவி கேமிரா பதிவு காட்சிகளை சோதனை செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News