உச்சகட்ட வழிபாட்டில் பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம்

குற்றாலம் அருகே உச்சகட்ட வழிபாட்டில் பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம்.

Update: 2024-04-24 12:02 GMT
பக்தர்கள் தரிசனம் 
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே குற்றாலம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள சிந்தாமணியில் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த திருத்தலமான ஸ்ரீஅழகு நாச்சியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பக்தர்கள் பரவசமூட்டும் பறவை காவடி, அலகு குத்தி முளைப்பாரி எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News