திருச்சி விமான நிலையத்தில் ரூ. 46.69 லட்சம் தங்கம் பறிமுதல்

சார்ஜாவிலிருந்து வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 46.69 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-01-30 07:42 GMT

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 

சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனைக்கு உள்ளாக்கினர். இதில், ஒரு பயணி தனது உடலுக்குள் ( அடி வயிற்றுக்குள்) மறைத்து 740 கிராம் பசை வடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்று, சிகிச்சை மூலம் தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.46.69 லட்சமாகும். இது குறித்து சுங்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து பயணியை கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News