ஆத்தூர் : அரசுமருத்துவமனை அருகில் தலைகீழாக தொங்கும் சிசிடிவி கேமரா

ஆத்தூரில் மருத்துவமனை வளாகம் அருகே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா தலைகீழாக செயலற்று இருப்பதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Update: 2024-02-23 12:31 GMT

ஆத்தூர் : அரசுமருத்துவமனை அருகில் தலைகீழாக தொங்கும் சிசிடிவி கேமரா

சேலம் மாவட்டம் ஆத்தூர் காமராஜனார் சாலைப் பகுதியில் மகளிர் காவல் நிலையம், அரசு மருத்துவமனை,சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், உள்ள நிலையில் மருத்துவமனை வளாகம் அருகே குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா தற்போது செயலற்று தலைகீழாக இருப்பதால் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் உடனடியாக சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News