ஆத்தூர்: புதிய திருமண மண்டபத்தை எம்.பி.பாரிவேந்தர் திறந்து வைத்தார்

ஆத்தூர் அருகே சுசீலா அருணாச்சலம் திருமண மண்டபத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் திறந்து வைத்தார்.

Update: 2024-05-19 14:02 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சீலையம்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள லட்சுமி விரைவில் தோட்டத்தில் வழக்கறிஞர் வெங்கடேசன் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள சுசீலா அருணாச்சலம் மினி மஹால் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது தொடந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் பங்கேற்க வருகை புரிந்தார் அப்போது அவருக்கு இந்திய ஜனநாயக கட்சியினர் மேளதாளங்கள் வானவேடிக்கை முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர், இதனை எடுத்து அவர் திருமண மண்டபத்துக்கு முன்பாக அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகரை தரிசித்தார் அதன் பிறகு சுசிலா அருணாச்சலம் திருமண மண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இதில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில முதன்மை அமைப்பு செயலாளர் சத்யநாதன் , அமைப்பு செயலாளர் எஸ் எஸ் வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் ஏ கே டி வரதராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆர் எம் கே மோகன் குமார், சேலம் புறநகர் மாவட்ட தலைவர் மனோகரன், செயலாளர் சதீஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் மணிவேல் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் இதில் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News