ஆத்தூர் : இந்திய கூட்டணி ஆதரித்து தெருமுனை பிரச்சாரம்

ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆதரித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2024-03-27 15:36 GMT

ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆதரித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் அதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மலையரசன் ஆதரித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னையன் தலைமையில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

10ஆண்டுகளாக பிரதமர் மோடி அரசு மதவாதத்தை மட்டுமே வளர்த்து வருவதாகவும் இதனால் இந்தியா கூட்டணி ஆதரித்து வருகிறோம் என்றும் தமிழகத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று இவ்வாறு கூட்டத்தில் பேசினார் இதில் திமுக ,திக, காங்கிரஸ், விசிக,மதிமுக , உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த பொருப்பாளர்களும் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தொடந்து 10ஆண்டுகளாக பிரதமர் மோடி அரசு மதவாதத்தை மட்டுமே வளர்த்து வருவதாகவும் இதனால் இந்தியா கூட்டணி ஆதரித்து வருகிறோம் என்றும் தமிழகத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று இவ்வாறு கூட்டத்தில் பேசினார் இதில் திமுக ,திக, காங்கிரஸ், விசிக,மதிமுக , உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த பொருப்பாளர்களும் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News