முன் விரோதம் காரணமாக தாக்குதல்

திண்டுக்கல் நாகல் நகர் அருகே ரகு என்பவரை, முன் விரோதம் காரணமாக ஆறு பேர் சேர்ந்து தேங்காயால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

Update: 2023-12-14 11:40 GMT

பைல் படம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் நாகல் நகர் அருகே மெங்கில்ஸ் ரோடு புது சந்து பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ரகு வயது 34.இவர் நாகல்நகர் சந்தை ரோடு அருகே நின்று கொண்டிருந்தபோது முன் விரோதம் காரணமாக ஆறு பேர் சேர்ந்து தேங்காயால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இது குறித்து நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News