சிலுவத்தூர் முன்விரோதம் காரணமாக தாக்குதல்
சிலுவத்தூர் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 10:42 GMT
கோப்பு படம்
திண்டுக்கல் சிலுவத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக மூன்று பேர் சேர்ந்து தாக்கியதில் ஒருவர் படுகாயம். திண்டுக்கல் சிலுவத்தூர் அருகே புகையிலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் முருகேஸ்வரி.
இவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது முன் விரோதம் காரணமாக மூன்று பேர் சேர்ந்து தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.