பூதப்பாண்டி அருகே கல்லூரி மாணவன் மீது தாக்குதல்

3 -பேர் மீது வழக்கு

Update: 2024-03-31 14:04 GMT

மாணவன் மீது தாக்குதல்

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் அடுத்துள்ள புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர். சுரேஷ் குமார். இவருடைய மகன் ஸ்ரீதர்சன் (வயது 19). இவர் கோயம் புத்தூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. பி. ஏ. இரண்டாமாண்டு படித்துவருகிறார். இவருக்கும் அழகியபாண்டியபுரம் அடுத்த எட்டாமடை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ஜெபின் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று ஸ்ரீதர்சன் புதுக்கிராமம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிந்தார். அப்போது அங்கு வந்த ஜெபின், கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த டெனால்டு மற்றும் சஞ்சய் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஸ்ரீதர்சனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்து அவர் பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெபின் உள்பட 3 -பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News