புதிய தமிழகம் கட்சி பிரச்சார வாகனம் மீது தாக்குதல்: 2 பேர் காயம்

சங்கரன்கோவில் அருகே புதிய தமிழகம் கட்சியின் பிரசார வாகனத்தின் மீது நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.

Update: 2024-04-09 03:26 GMT
காயம் அடைந்தவர்கள் 

தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு தொகுதி முழுவதும் பிரச்சார வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு சங்கரன்கோவில் அருகே தெற்கு புதூர் பகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் பிரச்சார ஆட்டோ சென்றுள்ளது. அந்த ஆட்டோவை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தி ஊருக்குள் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆட்டோ மீது மீது கல்வீசி தாக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோவில் இருந்த வடநத்தம்பட்டி மணிகண்டன், ராமசாமிபுரம் மகேஷ் இருவரும் கல்வீச்சில் காயமடைந்துள்ள னர். இது பற்றி சங்கரன்கோவில் தாலுகா போலீசில் அடையாளம் தெரியாத மூன்று பேர் கல்வீசி தாக்கியதாக புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தெற்கு புதூர் பகுதிக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News