சேலம் 4 ரோடு பகுதியில் ஓடும் பஸ்சில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் - தட்டி கேட்ட கணவர் மீது தாக்குதல்

Update: 2023-12-25 10:24 GMT

இளம் பெண்ணிடம் சில்மிஷம்

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்சனுக்கு நேற்றிரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் சேலம் ஜங்சன் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவியுடன் சென்றார். அதே பஸ்சில் தாதகாப்பட்டியை சேர்ந்த 27 வயதான நூல் மில் சூப்பர்வைசர் ஒருவர் பயணித்தார். பஸ் சேலம் 4 ரோடு பகுதியில் சென்ற போது அந்த சூப்பர்வைசர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பெண் கண்டித்தும் அதனை பொருட்படுத்தாத அவர் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை கவனித்த அந்த பெண்ணின் கணவர் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அந்த பெண்ணின் கணவர் முகத்தில் ஓங்கி குத்தினார். இதை கவனித்த கண்டக்டர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . விரைந்து வந்த போலீசார் அவரை அழைத்து சென்றனர். அப்போது அந்த நபர் குடி போதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து இன்று காலை விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News