வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி!

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள் நகை, பணம் கிடைக்காததால் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டை திருடிச் சென்றனர்.

Update: 2024-07-13 09:53 GMT

பந்தநல்லூர் அருகே தேநீர் கடையில் திருட்டு

தூத்துக்குடி பால்பாண்டிநகரை சேர்ந்தவர் சுகுமார் (64). இவருடைய மகன்கள் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகின்றனர். கடந்த 6-ந் தேதி மகன்களை பார்ப்பதற்காக சுகுமார் வீட்டை பூட்டிவிட்டு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். வீட்டில் தோட்டத்துக்கு ஒரு பெண் தண்ணீர் ஊற்றி வந்தார். அவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இது குறித்து சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சுகுமாரையும் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, வீட்டில் எந்த பொருளும் வைக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

இதனால் வீட்டில் நகை, பணம் எதுவும் திருட்டு போகவில்லை. அதே நேரத்தில், ஏமாற்றத்துடன் வெளியில் வந்த கொள்ளையர்கள், வீட்டின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட்டை திருடி சென்று விட்டார்களாம். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News