இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி- சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

அன்னூர் அருகே உதவுபோல் நடித்து இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-12-27 07:39 GMT

பைல் படம் 

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பெரிய புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. அப்பகுதியில் மளிகை கடை,கால்நடை தீவனம்,மின்சாதன கடை ஆகியவற்றை நடத்தி வருகிறார்.இவருக்கு உறுதுணையாக அவரது மகள் இருந்து வருகிறார்.இவர்களது கடைக்கு நேற்று இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பொருட்கள் வாங்க வந்துள்ளனர்.அப்போது கடைக்கு வந்த முதியவர் ஒருவர் கால்நடைக்கு தீவனம் வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மூட்டையை ஏற்றிய போது வாகனம் கீழே விழ கடையின் உரிமையாளரான ரேணுகா மற்றும் அவரது மகள் இருவரும் முதியோருக்கு உதவி செய்யதுள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்திருந்த மர்ம நபர் அவர்களுக்கு உதவுவது போல நடித்து ரேனுகாவின் மகள் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை அபகரிக்க முயற்சித்து நிலையில் நல் வாய்ப்பாக செயின் அறுந்து விடாமல் இருந்ததால் இருவரும் அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர்.இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அன்னூர் போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News