திண்டுக்கல் அருகே ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி

திண்டுக்கல் அருகே ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-12-30 15:05 GMT

திருட முயன்ற ஏடிஎம்

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி ரயில் நிலைய சாலையில், தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.59 மணிக்கு மா்ம நபா்கள் புகுந்தனா்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை அவா்கள் துணியால் மறைத்தனா். பிறகு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைக்க முடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதனால் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.1.80 லட்சம் தப்பியது. ஏனினும் திருட்டு முயற்சி குறித்து ஏடிஎம் மைய பணியாளா்கள், வடமதுரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Tags:    

Similar News