ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Update: 2024-02-24 05:28 GMT

கொள்ளை

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் ஒன்றிய அலுவலகம் அருகே செயல்படும் வங்கிக் கிளையின் முகப்பில் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை அங்கு வந்த மா்ம நபா்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனா். அப்போது ஏடிஎம் அலாரம் அடித்ததால், அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். புகாரின்பேரில், மணிகண்டம் போலீஸாா் விசாரிக்கின்றனா். ஏடிஎம்-இல் இரவு நேர காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தப்பிச் சென்ற கொள்ளைக் கும்பல், அப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகேயிருந்த யாசகம் பெறும் முதியவா் ரவியை தாக்கி அவா் வைத்திருந்த பணத்தையும் பறித்து சென்றனா். தாக்குதலில் அவா் காயமடைந்தாா். மணிகண்டம் பகுதியில் அண்மைக்காலமாக இதுபோன்ற தொடா் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாகவும், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
Tags:    

Similar News