தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு தொடக்கம்

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

Update: 2024-06-16 11:56 GMT

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு தொடங்கியது.


ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எச்.வாசுதேவன் தலைமை தாங்கினார். ஜே.கே. ஷா வகுப்புகள் மற்றும் வெராண்டா லேர்னிங் சொல்யுஷன்ஸ் நிறுவ னத்தின் துணைத்தலைவர் ஜி.சிவக்குமார் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். 'பேராசிரியர் விஷ்ணு வர்தன் தொழில்முறை பாடத்தேர்வுகளில் வெற்றி கொள்ள கையாளப்படும் நேர்த்தியான முறைகள் குறித்தும், தலைமை கல்வியாளர் கேதன் ஷா தணிக்கையாளர்கள் மற்றும் கணக்காளர்கள் அரங்கில் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்காக தற்போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முயற்சிகள் மற்றும் ஒழுக்கம் குறித்தும் பேசினர்.

இதில் நிறுமச்செயலியல் மற்றும் தொழில்சார் கணக்கு பதிவியல் துறைத்தலைவர் கே.ஏ.அழகு அப்பன், வணிகவியல், வங்கி மற்றும் காப்பீட்டுத்துறை தலைவர் கே.எம்.குமரகுரு, வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறைத்த லைவர் பி.கே.மங்கையர்க்கரசி, இணை பேராசிரியர் எம்.சதீஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News