பெண்ணைக் குத்திக் கொன்ற ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள்

திருச்சியில் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Update: 2024-03-27 02:07 GMT

தீரப்பு 

திருச்சி கேகே நகா் அருகேயுள்ள காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி உமாசந்தியா (38). அருகிலுள்ள ஜே கே நகா் பிரதான சாலையில் டிபன் கடை வைத்திருந்த இவா் குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில் இவரது கடைக்கு அடிக்கடி வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான சிவசண்முகம் (45) தன்னைத் தவறான கண்ணோட்டத்தில் அணுகியதால், இனி கடைப்பக்கம் வரக்கூடாது என உமாசந்தியா கண்டித்தாராம். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிவசங்கரன் கடந்த 2019 ஆகஸ்ட் 11 ஆம் தேதி தனது மகளுடன் அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்ற உமாசந்தியாவை வழிமறித்து தகராறு செய்தாா். அப்போது அவா் கத்தியால் குத்தியதில் உமாசந்தியா உயிரிழந்தாா். இதுதொடா்பாக விமான நிலைய காவல் நிலைய (அப்போதைய) காவல் ஆய்வாளா் பெரியசாமி மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த சிவசங்கரனை மறுநாள் கைது செய்தனா். திருச்சி மாவட்ட 3 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேல் குற்றம் உறுதியானதைடுத்து சிவசங்கரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்தாா். அபராதத்தைச் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் விமான நிலைய காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் ஆஜராகினா்.
Tags:    

Similar News