மேட்டு கண்டிகை பகுதியில் குடும்ப பிரச்சனையால் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு

வெள்ளவேடு அடுத்த கூடப்பாக்கம் மேட்டு கண்டிகை பகுதி குடும்ப பிரச்சனையால் ஆட்டோ டிரைவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

Update: 2024-02-21 11:29 GMT

பைல் படம்

வெள்ளவேடு அடுத்த கூடப்பாக்கம் மேட்டு கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 45. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு காயத்ரி என்ற மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் தினமும் சக்கரவர்த்தி குடித்து விட்டு வருவதால் கணவன், மனைவிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவியிடையே பிரச்னை ஏற்படவே, அதை மகன் தட்டி கேட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சக்கரவர்த்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ள வேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News