மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!

செய்யாறு அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பெருங்கட்டூர் அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-06-12 13:29 GMT

செய்யாறு அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பெருங்கட்டூர் அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு சிறப்பிடம் பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் பெருங்கட்டூர் அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர் சத்யா பக்தன் தலைமை வகித்தார்.முதுகலை ஆசிரியர் மு. சந்தானம் ,பட்டதாரி ஆசிரியர் ம. நடராஜன், உடற்கல்வி ஆசிரியர் ரா.தீபாவினோதினி, தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News