விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பரிசளிப்பு விழா !!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஆறாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.

Update: 2024-06-01 10:04 GMT

 பரிசளிப்பு விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஆறாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கால்பந்தாட்ட வீரர் ( 23 வயதுக்கு உட்பட்ட பிரிவு ) சிவசக்தி நாராயணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

11 வயது, 14 வயது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டனர். இந்திய கால்பந்தாட்ட வீரர் சிவசக்தி நாராயணன் கூறுகையில் சின்ன சிறிய அகாடமியில் இருந்து நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும்.

ஆரம்ப காலத்தில் கிராமங்களில் இருந்து உருவாகக்கூடிய விளையாட்டு வீரர்கள் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கிராமங்களில் இருந்து ஏராளமான கால்பந்தாட்ட வீரர்கள் உருவாகின்றனர். நானும் ஒரு கிராமத்திலிருந்து தான் கால்பந்தாட்ட வீரராக உருவாகியுள்ளேன். இதுபோன்று கிராமங்களில் கால்பந்தாட்டம் விளையாடுவதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது என கூறினார்.

Tags:    

Similar News