பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவருக்கு விருது !
தூத்துக்குடியில், பேரிடர் காலத்தில், சிறப்பாக செயல்பட்ட காமராஜ் கல்லூரி மாணவருக்கு, கல்லூரியின் துணை முதல்வர் அருணாசல ராஜன் விருது வழங்கி கௌரவித்தார்.
Update: 2024-03-11 11:52 GMT
பேரிடர் காலத்தில், மக்களை காக்க களத்தில் இறங்கி உயிரைப் பணயம் வைத்து மீட்பு மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்தமைக்காகவும், பிறருக்கு உதவும் மனப்பான்மையோடு உடல் உறுப்பு தானம் செய்வதற்காக பதிவு செய்திருந்தமைக்காகவும், காமராஜ் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் பிரிவில் பயின்று வரும் சதீஷ் என்ற மாணவருக்கு, கல்லூரியின் துணை முதல்வர் அருணாசல ராஜன் விருது வழங்கி கௌரவித்தார். மாணவ சமுதாயத்தில் இதுபோன்ற உதவும் மனப்பான்மை பெருக வேண்டும். மாணவர் சதிஷ் போல நாமும் இறந்தபின் மண்ணுக்கோ தீயிலோ இரையாக போகக்கூடிய உடல் உறுப்புகளை இறந்தும் நாம் வாழும் வகையில் பிறருக்கு பயன்படும்படி தானம் செய்ய முன்வர வேண்டும் என கல்லூரி துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.