கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்
கடலூரில் கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Update: 2024-07-05 08:09 GMT
பரிசு வழங்கப்பட்டது
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கலை பண்பாட்டுத்துறை வாயிலாக மாவட்ட அளவில் நடைபெற்ற குரலிசை, பரதநாட்டியம், கருவியிசை, கிராமிய நடனம், ஓவியம் உள்ளிட்ட கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் சான்றிதழ் மற்றும் காசோலைகளை வழங்கினார்.